பாம்புக்கும் நாய்க்கும் சண்டை: வயதான தம்பதியினரை காப்பாற்ற உயிரை விட்ட நாய் - NEWS NOW

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday 10 October 2017

பாம்புக்கும் நாய்க்கும் சண்டை: வயதான தம்பதியினரை காப்பாற்ற உயிரை விட்ட நாய்

கேரளாவில் நாய் ஒன்று நாகப்பாம்பிடம் சண்டையிட்டு தனது எஜமானை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளில் நாய்க்கு நன்றி உணர்வு உள்ள காரணத்தினாலேயே அதிக வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக நாய் ஒன்று தன்னை வளர்த்த எஜமானை காப்பாற்றுவதற்காக பாம்புடன் போராடி உயிரை விட்டுள்ளது. கேரளாவின் Perumbavu நகராட்சி பகுதியில் வயதான தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள், தங்களுக்கு துணையாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர், அப்போது 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று இவர்களது வீட்டுக்குள் நுழைந்துள்ளது.


இதனைப்பார்த்த நாய், பாம்புடன் பயங்கரமாக சண்டையிட்டுள்ளது, இதில் நாயினை பலமுறை பாம்பு கொத்தியதால் உடலில் விஷம் ஏறி நாய் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.
பாம்பும், நாய்க்கும் இடையே ஏற்பட்ட சண்டையை பார்த்து பயந்து போன முதியவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர், ஆனால் பொலிசார் வந்து பார்த்த போது நாய் இறந்துவிட்டது.
எங்கள் வீட்டில் உள்ள நபர்களில் ஒருவராக இருந்து வந்த நாய் இறந்தது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. என வயதான தம்பதியினர் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here